சென்னை மாநகராட்சி வளர்ப்பு நாய்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சென்னையில் தெருநாய்களும் வளர்ப்பு நாய்களும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. நடைபயிற்சிக்கு செல்லும் மக்களும் இருசக்கர வாகன ஓட்டிகளும் நாய்களின் தாக்குதலால் பாதிக்கப்படுகிறார்கள். இதைத் தடுக்க, சென்னை மாநகராட்சி வளர்ப்பு நாய்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும், உரிமம் பெற வேண்டும் போன்ற நெறிமுறைகள் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலானோர் இதை பின்பற்றவில்லை. இதனால், வரும் நாட்களில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்தப்படும். வாய்மூடி இல்லாமல் நாய்களை வெளியில் அழைத்துச்செல்லும் உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.