ஆன்லைன் மோசடி தளங்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மோசடி செய்பவர்கள், போலி அழைப்புகள் மற்றும் பாப்-அப் அறிவிப்புகள் மூலம் உங்கள் முக்கியமான தகவல்களை திருட முயற்சிக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, ஆதார் எண், கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான தகவல்களை அவர்கள் கேட்கலாம். மேலும், உங்களை மோசடி இணையதளங்களுக்கு அழைத்துச் சென்று, உங்கள் கணக்கில் இருந்து பணத்தை திருட முயற்சிக்கலாம்.
மோசடியில் இருந்து விடுபட, வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ சேனல்களில் வெளியாகும் தகவல்களை மட்டுமே நம்பவும். சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்யவோ அல்லது அத்தகைய செய்திகளுக்கு பதிலளிக்கவோ கூடாது. ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக webmanager@incometax.gov.in மற்றும் incident@cert-in.org.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல்களை அனுப்பி புகார் செய்யவும். ஆதார், OTPகள் மற்றும் கடவுச்சொற்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம். - இவ்வாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.