உலகில் டைனோசர் இனம் முழுமையாக அழிவதற்கு, தொடர்ச்சியான எரிமலை வெடிப்புகள் துணைபுரிவதாக அமைந்திருக்கலாம் என சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மேற்கு மற்றும் மையப் பகுதிகளில் அமைந்துள்ள பகுதிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இவை எரிமலை நிகழ்வுகளால் வெளிப்பட்ட லாவா குழம்புகளால் ஆன பகுதிகள் என உறுதி செய்தனர். எனவே, “அதிக எண்ணிக்கையிலான எரிமலை வெடிப்புகள் காலநிலை மாற்றத்திற்கு வழி வகுத்து, டைனோசர் இனம் முழுமையாக அழிவதற்கு வழி வகுத்திருக்கும். வெளியில் இருந்து வந்த விண்கல் மட்டுமே மொத்த டைனோசர் இனமும் அழிவதற்கு காரணமாக அமைந்திருக்காது” என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, “டைனோசர் இனம் முழுமையாக அழிவதற்கு 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன், எரிமலைகளில் இருந்து அதிக அளவில் சல்பர் மற்றும் புளோரின் வெளிப்பட்டு, நீண்ட குளிர் காலத்தை ஏற்படுத்தி, அழிவுக்கு வழி வகுத்திருக்கும்” என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.